என்ன பிழைப்பு இது?

றயாகரன் என்னதான் எழுதியிருப்பினும் அது குறித்து றயா நேரடியாகத் தனது கருத்துக்களை,உண்மைகளை நிறுவ வேண்டுமே ஒழியத் தேசம் நெற்றில் ஜெயபாலன் எழுதியதை வைத்துத் தனது கருத்துக்களைச்சீரமைக்க முடியாது.

குகநாதனை எந்த வகையிலுமே நம்புவதற்கான, நாணயமான மனிதனாக ஏற்றுக் கொள்வதற்கில்லை!

எத்தனை பித்தலாட்டம்,இந்தப் பிரச்சனையின் நிமித்தம் அரங்கேறுகிறது-யாரிந்தக் குகநாதன்?

குகநாதனுக்கும் மக்கள் அரசியலுக்கும் என்ன தொடர்பு?

குகநாதன் பிரச்சனையில் நாவலனை உரைப்பது எதன் நோக்கத்திலிருந்து?

இடதுசாரிய அரசியல் பேசும் எவரையும் ஓரங் கட்டுவதென்பது மக்கள்நல-எதிர்ப்பு அரசியல் நடவடிக்கையாக இருக்க முடியுமா?

றயாகரன் தனது கட்டுரைக்கான விளக்கங்களைத் தானே தந்து,நாவலன் "கடத்தல்-கப்பம்" கேட்கும் "சமூகவிரோதிதான்" என்று நிறுவ வேண்டும்.

இதை அவர் செய்ய வக்கின்றி இருக்கும் இந்த நேரத்தில்.
தேசம் நெற்றை இதுவரை திட்டித் தீர்த்துவிட்டதை மறந்து சந்தர்ப்வாத அரசியலைத் திட்டமிட்டு நடத்துறார்.

தமிழரங்க றயா தேசம் நெட்டின் கட்டுரையை,பேட்டியை வெட்டி ஒட்டித் தனது கட்டுரைக்குப் பலம்-ஆதாரம் தேடுகிறாரா?

குறித்து றயாகரன் எந்தவுரிமையுடன் தேசம் நெற்றைப் பயன் படுத்துகிறார்?

ஜெயபாலனை இந்திய உளவாளியென்று"அம்பலப்"படுத்திய நேர்மைமிகு றயாவுக்கு தேசம் நெற்றின் உளவு அவசியம்?

"ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை"என்று தேசம் நெற்றைத் தனது வங்கோரத்து அரசியலுக்குப் பலமாகப் பயன் படுத்துவதில் கவனம் றயாகரப் புரட்சிக்கு அதிகமாகிறது!
அடப்பாவமே....

இவ்வளவு சந்தர்ப்பவாதியை இதுவரை எவருமே காண முடியாது.றயாகரனுக்குத் தேவை தனது பொய்களை நிலைப்படுத்துவது.அதன்படி எவரையும்- எதையும்,எப்படியும் பயன் படுத்தித் தனது பொய்யை உண்மையாக்குவது.சுப்பர் அண்ணே-சுப்பர்!

என்ன பிழைப்பு இது?

தேசம் நெற்றுக் கட்டுரையை-பேட்டியை வெட்டித் தனது தமிழ் அரங்கத்தில் போடுறவர்,இதுவரை தேசம் நெற்றின் மற்றைய எத்தனையோ நல்ல கட்டுரைகளைப் பேட்டிகளை வெளியிடாதவர்-வெட்டி ஒட்டாதவர் என்பது கவனிக்க வேண்டியது.
றயாவின் அரசியலே இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சந்தர்ப்பவாதம்.இதில வந்து... மற்றவர்களை ஓரம்கட்டுவதற்கு எவருடனும் கூட்டணி...

றயாவைத் தவிர எவருமே இப்படி"புரட்சி"பேச முடியாது-உண்மை பேச முடியாது!

-ரவி