தோழிகளோடு அன்று..

புதிய வானம்.புதிய தெருக்கள்.புதிய மொழி.எல்லாம் எமக்குள் ஒன்றாய்க் குழப்பிக்கொண்டிருந் தது அன்று. நிருபா,பிராங்பேர்ட் ரஞ்சி,மல்லிகா அன்ரி,தேவிகா அக்கா எனச் சொந்தங்கள்.நாங்கள் புதிய குரலாக எமக்காகக் குரல் கொண்டபோது "நமது குரல் ஊதா சக்தி என மலர தயாவும் தோழியானாள்.இன்று எல்லாம் சுருங்கி இருக்கிறது.இராசேஸ் அக்காவின்ர மூச்சேத்தான் எங்கேயும் கேட்குது.

லெச்சுமி அக்கா இருந்து இருந்து எழுதுவது தெரியுது.உமா என்ன ஆனாள்.அம்மா(மல்லிகா அன்ரி)செத்தபின் குடும்பத்தோட மட்டும் வாழும் பொண்ணாக...

எங்களைப் பற்றி எவருக்கு அக்கறை?

நாங்கள் தொலைத்த வாழ்வு,ஈழவிடுதலையும் எண்டுதான் வரலாற்றில பதியவேணும்.எல்லாக் காலத்திலையும் செத்துப்போனவள் பெண்.
அந்தப் பெண் வெளிப்படையாகப் பேசினாத்தான் உண்மை முழுமை பெறும்.
போராட்டம் பற்றியும்,அதில பெண் பங்கு பற்றியும்,புலத்தில இருந்தவை புரட்சி பேசி ஊரை உலகத்துக்கு வித்ததையும்,இப்ப வித்துப்போட்டுத் திரும்ப புரட்சி பேசிகொண்டு எல்லாரையும் மேய்ஞ்சுகொண்டு நிப்பதையும் பேச வேணும்.தோழமை எண்டுறவை யாருக்கோ தூசு தட்டுகினம்.தமிழீழ விடுலையெண்டும்,பெண்விடுதலை,புரட்சி எண்டும்.என்னமோ தெரியாது... எல்லாரும் முண்டியடிச்சுத் திரியினம்.உண்மை தெரிஞ்சதைச் சொல்ல வேணும்.பொறுத்திருங்கோ சொல்லுறன்.

தியாகினி

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home