பெண்ணெழுத்தின் மீது

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல்இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன்சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்‘ கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு ‘இந்துமக்கள் கட்சி‘ சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசாரஅடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:


* இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8

* (எழும்பூர் மியூசியம் எதிரில்)

* நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி


பங்கேற்பாளர்கள் :


அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், சுகிர்தராணி, பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின்மலர், நிர்மலா கொற்றவை.


எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.


தொடர்புக்கு :

கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்

3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20

பேசி : 94441 20582
———————————————————

*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின்கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

Labels: , ,

1 Comments:

At 8 April 2010 at 03:37 , Anonymous Anonymous said...

தஸ்லீமாவை விரட்டு என்று சொல்லும் தமுமுகவின் ஆலோசகர் அ.மார்க்ஸ் ஒளரங்கசீப் குறித்த ஒவியக் கண்காட்சியை நிறுத்தும் போது யாருக்கு ஆதரவாக
இருந்தார், குரல் கொடுத்தார்.ரசூல் என்ற படைப்பாளியை ஊர்விலக்கம் செய்த ஜமாத்தை எதிர்த்து உங்களில் எத்தனை பேர் குரல் கொடுத்தீர்கள்.

‘இந்தக் கலாசாரஅடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்’ அனைத்து மத அமைப்புகளையும் கண்டிக்குமா இல்லை இன்னொரு இந்த்துவ எதிர்ப்பு கூட்டமாக முடியுமா?.

அ.மார்க்ஸ்,சுகுணா திவாகர் போன்றவர்கள் இஸ்லாமிய் அடிப்படைவாத அமைப்புகளுக்கு எதிராக எதுவும் எழுதமாட்டார்கள். அவற்றுடன் உறவாடிக் கொண்டு எப்படி கலாச்சார அடிப்படைவாதத்தினை எதிர்க்க முடியும்.
‘கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்’
இது அ.மார்க்ஸ் துவக்கிய/பங்கேற்கும் 1234வது அமைப்பு :)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home