எல்லோரும் நலமா?
ஹாய் பெரியோரே,இந்த வலைக் குறிப்புக் கு நான் புதியவள்.ஆனால் தளத்திலும்,புலத்திலும் நான் அறியப்பட்டவள்.
விடுதலைப் போரிலும்ஈபின் பெண்கள் சந்திப்பு,குரலெனப் பரவலாகப் பதியப்பட்டவள்.
வலை பதிந்துவரும் பல தோழிகள்-தோழர்கள் என்னை வரவேற்றபோது எதுவுமே தெரியாத இன்டர்நெட் தொழில்நுட்பத்தோடுதான் உங்களோடு இணைய வருகிறேன்.
இந்த தளத்தில என்னை எழுதச் சொல்லும் தோழிகளுக்கும்,நண்பர்களுக்கும்.நன்றி.
குறிப்பாகத் தோழி ஜெபாவுக்கும்,கௌரிக்கும் நன்றி சொல்ல வேண்டும்.இந்த இன்டர் நெட்டில் முன்பே எழுதிவரும் தோழர்கள் எனக்கு வழிகாட்டியாக முடியும்.அவர்களுள்தோழர்கள் பலர்.குறிப்பாக செந்தில் குமரனுக்கு நன்றி சொல்வேன்.எனக்கு,தோழி இராஸேஸ்வரி பாலா அவரின் விடாத துணிச்சல் முன் உதாரணம்.
அவரை எண்ணும்போது பயம் விட்டுப் போய்விட்டது.
தொடர்ந்து எழுதுவேன்.அனுபவங்கள் பல.அது,புலத்திலும் தளத்தில் போராடியதும்,எழுதியதும் என்று...
இன்று "எமது குரல்"வெளிவரவேண்டும்.
ஈழப் போராட்டத்தில் ஆண்சார் அனுபவங்களும்,அவைகளின் வீரப்பிரதாபங்களுமே பரவலாகப் பேசப்படுகிறது.எமது இருப்பு எவராலும் பேசப்படவில்லை.இதுபற்றி எழுதுவது என் நோக்கம்.எங்கள் விடுதலைப் போராட்டத்தின் உள்ளே நாம் இருந்தோம்.அதை நசித்தவர்களும் எமக்குள்ளேதான் இருந்தவை.
இப்போதும் புலத்தில் புரட்சி என்பவர்களும் அதில துணையோடு இருந்தவையள்.நாங்களும் பேசவேண்டும்.
பேசுவேன்.பெண்கள் சந்திப்பில் இதுபற்றி விவாதிப்போம்.இப்போது நான் வருகிறேன்.இனியும் பலர் வருவினம்.இப்போதைக்கு நன்றி.
மீண்டும் சந்திக்கிறேன்,
தியாகினி.
Labels: உங்களோடு